states

img

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து - அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம்

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோரி அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில், மொத்தமுள்ள 90  இடங்களில், தேசிய மாநாடு, காங்கிரஸ், சிபிஎம் கட்சிகளை உள்ளடக்கிய ‘இந்தியா’ கூட்டணி 49 இடங்களை வென்றது. தேசிய மாநாடு 42, காங்கிரஸ் 6, சிபிஎம் 1 என இடங்களில் வெற்றி பெற்றிருந்தன. ஆம் ஆத்மி கட்சி ஆதரவின் மூலம் இந்த எண்ணிக்கை 50 ஆனது. சுயேச்சைகள் 4 பேர் தேசிய மாநாட்டு கட்சியில் இணைந் ததன் மூலம், எண்ணிக்கை பலம் 54 ஆக உயர்ந்தது. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராக உமர் அப்துல்லா கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டர்.  இதை தொடர்ந்து, முதலமைச்சர் உமர் அப்துல்லா தலைமையில் கடந்த 17-ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தான 370ஆவது சட்டப் பிரிவை மோடி அரசு பறித்தது. பின்னர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.